அங்கயற்க்கன்னி பாமாலை

அங்கயற்கன்னி எங்கள் மங்களச் செல்வி
அங்கயற்கன்னி எங்கள் மங்களச் செல்வி


தங்கரதம் ஏறி வரும் அங்கயற்கன்னி-தமிழ்
சங்கம் வைத்த மதுரையிலே அங்கயற்கன்னி
எங்கிருந்து நினைத்தாலும் அங்கு வருவாய்-அம்மா
எப்பொழுது என் நாவில் பொங்கி எழுவாய்.

சோலையிலே ஆடிவரும் நீலமயிலே-எங்கும்
சொக்கத் தங்கம் பூசி வரும் மாலை வெயிலே
பாலையிலே ஓடிவரும் ஜீவநதியே-என்
பாடலிலே ஏறிவரும் ஞான ஒளியே.

பூவிருந்த இடம் கூட கமகமக்கும்-பசும்
பொன்னிருந்த இடம் கூட பளபளக்கும்
நீ இருக்கும் இடம் எனது மனம் இல்லையா-அது
நெக்கு விடும் வண்ணம் இறீங்கே தினம் தொல்லையா.

பார்வையிலே காப்பாற்று மீன்போலே - அதிக
பாரமம்மா நீ தாங்கு தூண்போலே
வேர்வையைத் துடைத்து விடுதாய் போலே -என்
வீட்டில் வந்து விளையாடு சேய் போலே.