ஐயன் பவனி வருதல்

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா


பவனி வாராரிங்கே சுவாமி சரணம் ஐயப்பா
வாவர் சுவாமி கூட வாரார் சரணம் ஐயப்பா
காவலர்கள் கூட வாரார் சரணம் ஐயப்பா
ஆவலோடு கூப்பிடுவோம் சரணம் ஐயப்பா

அம்பும் வில்லும் கையிலேந்தி சுவாமி வருகிறார்
எம்பெருமான் துள்ளித் துள்ளி ஆடிவருகிறார்
துன்பமெலாம் தீர்த்திடவே பவனி வருகிறார்
இன்பமொடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா

தந்தை தாயுமான சுவாமி பவனி வருகிறார்
வேதியர் சபை நடுவே சுவாமி வருகிறார்
பூதப்படைகளுடனே ஐயன் வருகிறார்
இத்தருணம் காத்திடுவாய் சரணம் ஐயப்பா

கடகடவென பேரிமுழங்க சுவாமி பவனி வருகிறார்
கொட்டு வாத்தியம் முழங்கிடவே ஐயன் வருகிறார்
மாடன் சடையன் பொருளன் இருளன் சரணம் ஐயப்பா!
ஓடிவாரார் பவனி வாரார் சரணம் ஐயப்பா

மின்னல்போல் ஒளிவிளங்க சரணம் ஐயப்பா
பொன்னுமேனி கண்டிடவே சரணம் ஐயப்பா
தனிச்சிலம்பும் சல்லடையும் சுவாமி ஐயப்பா
கணகணவென சலங்கை குலுங்க பவனி வருகிறார்

பிள்ளைக்குறையால் உள்ளம் நொந்து வருந்தும் பக்தரை
உள்ளமிரங்கி கருணை காட்டி பாரும் ஐயப்பா
வள்ளலென்று பெயர் விளங்கும் எங்கள் ஐயப்பா
அள்ளி அள்ளி ஏகிடுவாய் செல்வக்குவியலை

கடும்பிணியின் கொடுமையினால் வருந்தும் அன்பரை
நொடிப்பொழுதில் பிணியகற்றி காத்தருள் அய்யா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா