குன்றக்குடியில் முருகோனே


வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா


சொல்லச் சொல்ல நாவினிக்கும்
சொக்கும் கண்கள் நீர்துளிக்கும்
கல்லும் கனிந்து கவிபடைக்கும்
காடும் மேடும் கமகமக்கும்

அல்லும் பகலும் ஓதுகிறேன்
ஐயா உன்னைப் பாடுகிறேன்
கொல்லும் கவலை களைவோனே
குன்றக்குடியில் முருகோனே

வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா

உச்சி குளிர உடல் குளிர
உருகும் அடியார் களைபெருக
பச்சை மயிலும் வேலோடும்
பன்னீராடும் பெருமானே

அச்சம் அகற்றி என்னையுமுன்
ஆளாய்கொண்ட தலைவோனே
கொச்சைத் தமிழும் அணிவானே
குன்றக்குடியில் முருகோனே

வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா
வேல் வேல் முருகா வேல் முருகா