திருப்புத்தூர் கருப்பண்ணன்

அரோகரா

சேவைகள் செய்வோரை சீர்சிறக்க வைத்திடும்
சிங்காரமான கருப்பன்
தேவைமாநகர் வாழும் தொண்டர்கள் தவறாது
தெண்டனிட வந்த கருப்பன்
அகன்றபெரு நெற்றியும் அரிவாளும் கையுமாய்
ஆளவே வந்த எங்கள்
அழகான திருப்புத்தூர் கருப்பண்ண சாமியை
அருகிலே வந்து பணிவீர்
பிள்ளைவரம் வேண்டுவோர் பெரும்பண் தேடுவோர்
பெற்றிட இங்கு வாரீர்
எல்லைக்குக் காவலாய் ஏவலுக் கெதிரியாய்
இருப்பவனை இங்கு பாரீர்
தள்ளாடி ஓய்ந்தபின் தாத்தாவாய் ஆனபின்
தரிசிக்க வாய்ப்பு மில்லை
முள்ளான வாழ்விலே நன்றாக வாழவே
முடியும்வரை வணங்கி வருவோம்.