திருமுகத்தை மறக்க முடியுமா!


பழனிமலைக்கு நான் வராமல் இருக்க முடியுமா - உன்
பால்வடியும் திருமுகத்தை மறக்க முடியுமா! மறக்க முடியுமா!


ஆண்டுதோறும் ஆண்டுதோறும் பழனி வருகிறேன் - என்
ஆண்டவனே உனதருளை வேண்டி வருகிறேன்
தெய்வயாணை வள்ளியுடன் நீவருவாயா - உன்னை
தேடிவரும் எங்களுக்கு அருள்தருவாயா!

காவடியைக் கண்டவுடன் பக்தி பெருகுது - என்
கால்வலியும், மேல் வலியும் பறந்து செல்லது
கட்டிவரும் காவடியில் வீற்றிருப்பவனே - அதை
சுமந்து வரும் தோல்களுக்கு துணை இருப்பவனே!

வெற்றியுடன் எனது வாழ்வு நடைபெற வேணும் - நான்
வேண்டும் வரம் தந்து எனை காத்திட வேண்டும்
அன்னதானமடத்தினிலே கொலு விருப்பவனே! - அங்கே
ஆறுகாலு சவுக்கையிலே ஆடிநிற்பவனே!

அருளாடி வடிவினிலே நோ¢ல் வந்திடுவாய் - உள்
அடியவர்க்கு பொன் பொருளை அள்ளித் தந்திடுவாய்

தங்கரதம் ஏறி இங்கே நீவருவாயா - பெற்ற
தாய்போல எங்களுக்கு துணை இருப்பாயா


லெ.சோமு. பெங்களூர்