தொந்தி கணபதி

தொந்தி கணபதி வா வா வா
வந்தே ஒரு வரம் தா தா தா


கந்தனின் அண்ணா வா வா வா
கனிவுடன் ஒரு வரம் தா தா தா
பானை வயிற்றுடன் வா வா வா
பணிந்தேன் ஒரு வரம் தா தா தா (தொந்தி)

குள்ள குள்ளனே வா வா வா
குண்டு வயிறனே வா வா வா
ஆனை முகத்துடன் வா வா வா
அவசியம் ஒரு வரம் தா தா தா (தொந்தி)

எல்லாம் அறிந்த கணபதியே
எவ் வரம் கேட்பேன் தெரியாதா
நல்லவன் என்னும் ஒரு பெயரை
நான் பெறவே வரம் தா தா தா (தொந்தி)

ந.ந.ஆ. ஏச்ஙுக் ஆச்ட்சூ,