பிள்ளையார் வணக்கம்

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்

ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்

மஞ்சளிலே செய்திடினும் மண்ணினாலே செய்திடினும்
அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சில் காட்டும் பிள்ளையார்

அவல்பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும்
கவலையின்றி உண்ணுவார் கண்ணைமூடித் தூங்குவார்.

கலியுகத்தின் விந்தையைக் காண வேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவார்.