ரெங்கா ரெங்கா ஓடிவா

ஏ... ரெங்கா ரெங்கா ஓடிவா பாண்டுரங்கா ஓடிவா
பண்டரி புரம்வாழும் பாண்டுரங்க சாமியே
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா


பாற்கடலின் மீதினில் பாம்பணையில் தூங்கியே
பார் முழுதும் படியளக்கும் பாண்டுரங்க சாமியே
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா! (ஏ... ரங்கா)

மங்காபுரம் தாயிருக்க மலைமேலே நீயிருக்க
ஏழுமலை நாதனே எங்கள்சீனி வாசனே
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ... ரங்கா)

எங்கும்நீ திளவும் எல்லோருமே வாழவும்
பத்துஅவ தாரமாய் பார்புகழ வந்தவா
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ... ரங்கா)

சங்குசக்கரம் கொண்டுவா தாயாரையும் கூட்டிவா
கண்குளிரக் காணவா கார்மேக சாமியே
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ... ரங்கா)

சர்வலோக நாயகா சங்கரனின் மைத்துனா
பாரளந்த தேவனே பறந்துவாராய் சாமியே
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ... ரங்கா)

காவடியான் மாமனாம் காலடியால் வாமனை
மூவடியாய் ஆண்டவா என்பாவடியில் ஆடியே
நீ... எங்களைக் காக்கவே ஓடோடிவா (ஏ... ரங்கா)

-சோலை இராமச்சந்திரன்