இருமுடி தாங்கி

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும்
திருவடியைக் காண வந்தோம்.

பல்லவி

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ, ஐயப்போ சாமியே
நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூரதீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடிக்கொண்டு
ஐயனை நாடிச் சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார்

அனுபல்லவி

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்தசாரதியின் மைந்தனே உனைப்
பார்க்க வேண்டியே தவமிருந்து

இருமுடி எடுத்து எரிமேலி வந்து
ஒரு மனதாகிப் பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள்மலை ஏறிடுவார்
அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்துச் செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார் ஐயன்
வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இரக்கம் வந்தவுடனே
பெருநதி பம்பை கண்டிடுவார்

கங்கை நதிபோல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி சங்கரன் மகனைக் கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட் காவலனாயிருப்பார்
தேக பலம்தா என்றால்
அவர் தன் தேகத்தை தந்திடுவார்
பாதபலம் தா என்றா அவர்
தன் பாதத்தை தந்திடுவார் - நல்ல
பாதையைக் காட்டிடுவார்

சபரீ பீடமே வந்திடுவார்
சபரி அன்னையைப் பணிந்திடுவார்
சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரிமலை தனை நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீதும் ஏறிடுவார்
கதி யென்றவனைச் சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சாமியே ஐயப்பா சாமியே ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்போ சாமி சரணம் ஐயப்போ

சோமு