அவனாசிப் பத்து

வற்றாத பொய்கை வளநாடு கண்டு
மலைமேலிருந்த குமரா அரோகரா
உற்றார் எனக்கு ஒருபேரு மில்லை
உமையாள் தனக்குமகனே
முத்தாடைதந்து அடியேனை யாளும்
முருகேசன் என்றனரசே!
வித்தார மாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 1

ஆலால முண்டோன் மகனாகி வந்து
அடியார் தமக்கும் உதவி
பாலூர(ல்) உண்டு கனிவாய் திறந்து
பயனஞ் செழுத்தை மறவேன்
மாலான வள்ளி தனைநாடி வந்து
வடிவாகி நின்ற குமரா!
மேலான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 2

திருவாசல் தோறும் அருள்வே தமோத
சிவனஞ் செழுத்தைமறவேன்
முருகேசரென்று அறியார் தமக்கு
முதலாகி நின்றகுமரா
குருநாத சுவாமி குறமாது நாதர்
குமரேச(ர்) என்ற பொருளே!
மறவாமல் வெற்றி மயில்மீதிலேறி
வரமேணு மென்றனருகே! 3

உதிரந் திரண்டு பனியீர லுண்டு
உருவாசல் தேடிவருமுன்
ததிபோ லெழுந்த திருமேனி நாதர்
கடைவீடு தந்து மருள்வாய்
முதிரஞ் சிறந்த வயல்வீறு செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
யதிராய் நடந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 4

மண்ணாடு மீசன் மகனாரை யுந்தன்
மலைவீடு தந்து மருள்வாய்
வண்டூரல் பாயும் வயலூரில் செங்கை
வடிவேல் எடுத்தகுமரா!
நன்றாக வந்து அடியேனை யாண்டு
நல்வீடு தந்தகுகனே!
கொண்டாடி வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 5

நீலஞ் சிறந்த குறமாது வள்ளி
நின்பாகம் வைத்தகுமரா
காலனெழுந்து வெகுபூசை செய்து
கயிறுமெடுத்து வருமுன்
வேலும் பிடித்து அடியார் தமக்கு
வீராதி வீரருடனே
சாலப் பரிந்து மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 6

தலைகட்ட நூலின் நிழல்போல நின்று
தடுமாறி நொந்து அடியேன்
நிலைகெட்டு யானும் புவிமீதில் நின்று
நெடுமூச் செறிய விதியோ
அலைதொட்ட செங்கை வடிவேற் கடம்பா
அடியேனை ஆளுமுருகா!
மலையேறி மேவுமயில்மீ திலேறி
வரவே ணுமென்றனருகே! 7

வண்டுண்டு பூவில் மதுவூரில் பாயும்
வயலூரில் செங்கை வடிவேல்
கண்டொன்று சொல்லித் திரிவார்கள் வாசல்
கடனென்று கேட்கவிதியோ?
வண்டூறு பூவிலிதழ் மேவும் வள்ளி
தெய்வா னைக்குகந்த வேலா
நன்றென்று சொல்லி மயில்மீ திலேறி
வரவே ணுமென்ற னருகே! 8

விடதூத ரோடி வரும் போது உம்மை
வெகுவாக நம்பினேனே
குறமாது வள்ளியிடமாக வைத்து
மயிலேறி வந்தகுமரா
திடமாகச் சோலை மலைமீ தில்வாழும்
திருமால் தமக் குமருகா!
வடமா னபழநி வடிவேல் நாதா
வர வேணு மென்றனருகே! 9

ஓங்கார சக்தி உமைபால் குடித்து
உபதேச முரைத்தபரனே!
பூங்கா வனத்தில் இதழ் மேவும் வள்ளி
புஜமீ திருந்தகுகனே
ஆங்கார சூரர் படைவீடு சோர
வடிவேல் விடுத்த பூபா
பாங்கான வெற்றி மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 10

ஆறாறு மாறு வயதான போது
அடியேன் நினைத்தபடியால்
வேறேது சிந்தை நினையாம லுந்தன்
ஆசாரசங்கமருள்வாய்
அசுரேசர் போல யமதூத ரென்னைத்
தொட்டோட கட்ட வருமுன்
மாறாது தோகை மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 11

கையார உன்னைத் தொழுதேத்த மனது
கபடேது சற்றுமறியேன்
அய்யா உனக்கு ஆளாகும் போது
அடியார் தமக்கும் எளியேன்
பொய்யான காயம் அறவே ஒடுங்க
உயிர்கொண்டு போகவருமுன்
வையாளி யாக மயில்மீ திலேறி
வரவேணு மென்றனருகே! 12

ஏதேது ஜென்ம மெடுத்தேனோ முந்தி
யிந்தப் பிறப்பிலறியேன்
மாதாபி தாநீ மாயன் தனக்கு
மருகா குறத்திக ணவா
காதோடு கண்ணை யிருளாக மூடி
உயிர்கொண்டு போகவருமுன்
வாதாடி நின்று மயில்மீ திலேறி
வரவேணும் மென்றனருகே! 13