உன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன்
வண்ணமயில் ஏறிவரும் வள்ளியம்மை நாயகனே
காலங்கள் மாறிவிடும் கவலைகள் தீர்ந்துவிடும்
கந்தா உன்பெயரைச் சொன்னால் கைநிறைய காசுவரும்

உன்னை சரணடைந்தேன் உன்னருளை வேண்டுகின்றேன்
உன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன்
வண்ணமயில் ஏறிவரும் வள்ளியம்மை நாயகனே

பந்தமுண்டு பாசமுண்டு சொந்தமுண்டு சுற்றம் உண்டு
பந்தமுண்டு பாசமுண்டு சொந்தமுண்டு சுற்றம் உண்டு
அண்ணன் என்றும் தம்பி என்றும் அன்புடைய மாமனென்றும்
அண்ணன் என்றும் தம்பி என்றும் அன்புடைய மாமனென்றும்
இவ்வுலக வாழ்க்கையிலே எத்தனையோ உறவுஉண்டு

அண்ணன் என்றும் தம்பி என்றும் அன்புடைய மாமனென்றும்
இவ்வுலக வாழ்க்கையிலே எத்தனையோ உறவுஉண்டு

உன்னை சரணடைந்தேன் உன்புகழை பாடிவந்தேன்
வண்ணமயில் ஏறிவரும் வள்ளியம்மை நாயகனே


Singer : Somasundaram L, Bangalore

--
Digital Eye,
S Saravanan