உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை
கனவிலும் நீயே, நினைவிலும் நீயே, கருணை செய்வாயே ஞானாட்சி

உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை
கனவிலும் நீயே, நினைவிலும் நீயே, கருணை செய்வாயே ஞானாட்சி
உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை

என்னுடல்,உயிர் யாவும் உனதல்லவா, நான் உலகினில் வாழ்வதுன் செயலல்லவா
என்னுடல்,உயிர் யாவும் உனதல்லவா, நான் உலகினில் வாழ்வதுன் செயலல்லவா
கண்ணில்வழிந்தோடும் நீர்துடைத்து என்னை, காத்தருள் செய்வதுன் கடனல்லவா
கண்ணில்வழிந்தோடும் நீர்துடைத்து என்னை, காத்தருள் செய்வதுன் கடனல்லவா

உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை

வேதனையோ இன்னும் தீரவில்லை, அம்மா வேறொருவழியும் தெரியவில்லை
வேதனையோ இன்னும் தீரவில்லை, அம்மா வேறொருவழியும் தெரியவில்லை
ஆதரவோடென்னை காத்தருள்வாய் அம்மா, அருள்புரிந்தே என்னை ஆதரிப்பாய்
ஆதரவோடென்னை காத்தருள்வாய் அம்மா, அருள்புரிந்தே என்னை ஆதரிப்பாய்

உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை

பிஞ்சுமனம் எந்தன் பேதைமனம், உன்னைப்பிரியநினைக்காத வெள்ளை மனம்
பிஞ்சுமனம் எந்தன் பேதைமனம், உன்னைப்பிரியநினைக்காத வெள்ளை மனம்
தஞ்சமென்றே நான்உனையடைந்தேன் அம்மா, தயைபுரிந்தே என்னை வாழவைப்பாய்
தஞ்சமென்றே நான்உனையடைந்தேன் அம்மா, தயைபுரிந்தே என்னை வாழவைப்பாய்

உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை
கனவிலும் நீயே, நினைவிலும் நீயே, கருணை செய்வாயே ஞானாட்சி
உறவை மறந்தாலும், உணவை மறந்தாலும், உன்னை நான் மறப்பதில்லை


Singer : Somasundaram L, Bangalore