பச்சை மயில் வாகனனே

பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்பிரமணியனே வா - இங்கு
இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன்
எள்ளளவும்ஐயமில்லை -


கொஞ்சும் மொழியானாலும் - உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - இங்கு
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா - (பச்சைமயில்)

வெள்ளமது பள்ளந்தனிலே பாயும்
தன்மை போல உள்ளந்தனிலே - நீ
மெள்ள் மெள்ள புகுந்து விட்டாய் எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா - (பச்சைமயில்)

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அதில்
நேர்மை என்னும் திபம் வைத்தேன் - நீ
செஞ்சிலம்ப கொஞ்சிட வா மருகா
சேவற் கொடி மயில் வீரா - (பச்சைமயில்)

ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா - நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே- (பச்சைமயில்)

அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் - (பச்சைமயில்)