விதி மாற்றி புது வாழ்வு தருக

வேலாட மயிலாட வேலாட மயிலாட
வினைபோக்கி எமையாள வருக!
விதி மாற்றிப் புது வாழ்வு தருக _ முருகா
விரைந்தோடி எமைக் காக்க வருக.


சிறியேனும் உன்பிள்ளை
உன்வீட்டின் கொடிமுல்லை
அடியேனுக் கருள் காட்சி தருக - தினம்
அயில்வேலும் மயிலோடும் வருக

விடி காலை ஜப வேளை
வடிவேலைத் தொழும் வேலை
மடி நீக்கி மனதாள வருக _ முருகா
மயிலோடும் வேலோடும் வருக

உலகாளும் தலைவா நீ
உனதாட்சி தனிமாட்சி
தேவானை குறமாதும்கூட _ முருகா
திருக் காட்சி தரவேண்டும் பாட

திருச்செந்தூர் பரங்குன்றம்
தென்பழநி சோலைமலை
திருத்தணிகை சுவாமிமலை குருவே முருகா
செவ்வேளே சிங்கார உருவே

மங்காத ஒளிவீசும்
மதிபோலும் முகமானோய்
எங்கேனும் உன் போன்ற காட்சி _ முருகா
இனிமேலும் அமையாதே மாட்சி

இடரேதும் வாராது
எனநீயும் கூறாது
இனிமேலும் விடமாட்டேன் உனையே _ முருகா
இனி நானும் போவதெங்கே தனியே