அபிராமி எங்கள் அபிராமி
திருக்கடையூர் வாழும் அபிராமி

அன்னையென வீற்றிருக்கும் அபிராமி
என்னைக்கண் பாரம்மா அபிராமி
தஞ்சமென வந்தோரின் பஞ்சம் பினி போக்கிடவே
நெஞ்சம்தனில் வாழும் அபிராமி

அபிராமி பட்டருக்கு அபிராமி -நீ
முழுமதியாய் காட்சி தந்தாய் அபிராமி
நிலையான செல்வம் தந்து வளமான வாழ்வுதர
வரவேண்டும் எங்கள் தாயே அபிராமி

எங்கெங்கு இசைத்தாலும் அபிராமி
அங்கே உன் அருள் வேண்டும் அபிராமி
அடியார்கள் பாடல் கேட்டு ஓடோடி நீ வந்து
அருள்மாலை தரவேண்டும் அபிராமி