ஓ சிதம்பர வாசனே, ஓ சிதம்பர வாசனே
தில்லை நடராஜனே, சிவகாமி நேசனே வா!

உன் நடனத்தைக் காணவே!
நாடி வந்தேன் சிவனே!
நலம் பெற அருள்வாயே  - ஓ சிதம்பரம் வாசனே,

பிட்டுக்கு மண் சுமந்த நேசனே, கையில் பிரம்பால் பிரம்படிபட்ட பரமேசனே
கையில் கட்டுக்கட்டாய் விறகினைக் கடைத்தெருவில்
விற்று வந்த கைலகிரி நாதனே வா! - ஓ சிதம்பரம் வாசனே

சாம்பல் நிறம் பூசிக்கொண்டு வந்து,
தலை ஆண்டி வேடம் போட்டுக்கொண்டு வந்து,
சாம்பசிவ சங்கரா, சாம்பசிவ சங்கரா வா! - ஓ சிதம்பர வாசனே